சுறுசுறுப்பாக பொருட்களை கொள்வனவு செய்வதற்கு ஆர்வம் காட்டிய கந்தளாய் மக்கள்

எப்.முபாரக்-
டந்த நான்கு தினங்களாக ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது அடுத்து மக்கள் தங்களுடைய அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
குறிப்பாக இன்று(6)திருகோணமலை பொதுச் சந்தையில் மக்கள் முக கவசம் அணிந்து தங்களுடைய பொருட்களை கொள்வனவு செய்ததையும் எம்மால் காணக்கூடியதாக இருந்தது.

இருந்தபோதிலும் சுகாதாரத்தை பேணுமாறு பொலிசாரும் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் இராணுவத்தினரும் மக்களை தெளிவுபடுத்தியதையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.பொது மக்கள் வங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் சம இடைவெளியை பேணியதையும் காணக்கூடியதாக இருந்தது.

கந்தளாய் நகர பகுதிகளில் காலையிலிருந்து வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் கந்தளாய் தலைமையக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை கந்தளாய் நகர் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் கூடிய பகுதிகளுக்கு கிருமிநாசினிகள் பரவுவதை தடுப்பதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள் கிருமிநாசினிகள் வீச படுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -