அன்னமலைக்கிராம விதவைகளுக்கு 'அன்பேசிவம்' அமைப்பின் உலருணவுப்பொதிகள்.


காரைதீவு சகா-
கொனாராநெருக்கடிக்காலகட்டத்தில் துன்பத்துக்குள்ளான அம்பாறை மாவட்ட நாவிதன்வெளிப்பிரதேசத்திலுள்ள மிகவும் பின்தங்கிய அன்னமலை கிராம பெண்கள்தலைமைதாங்கும் விதவைகளுக்கு சுவிஸ் 'அன்பேசிவம்' அமைப்பின் ஏற்பாட்டில் 50 உலருணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

பெண்கள் தலைமைதாங்கும் மற்றும் சிறுநீரகநோயாளிகளுக்குமான உதவிகள் ஒருதொகுதி உலருணவு 50 நிவாரணப்பொதிகள் நாவிதன்வெளிப்பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் முன்னிலையில் வழங்கிவைக்கப்பட்டன.

சுவிஸ் சூரிச் ஆதிசிவனாலயத்தின் தமிழ்ச்சங்கத்தின் 'அன்பே சிவம்' என்ற அமைப்பினர் கொரோனா நெருக்கடிக்குள்ளான மக்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்கும் உதவியை அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் யாழ்.பல்கலைக்கழகமாணவன் இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமாரின் ஏற்பாட்டில் வழங்கிவைத்தது.

நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேசசெயலாளர் எஸ்.ரங்கநாதன் சமுகசெயற்பாட்டாளர் கே.ஜெயசிறில் அமைப்பின் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா 'அன்பேசிவம்' அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஆசிரியர் என்.ரவிந்திரன் கோரக்கர் பிள்ளையார் ஆலயத்தலைவர் எஸ்.மோகன் கோரக்கர்கிராம பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் சோ. தினேஸ்குமார் மற்றும் கிராமசேவையாளர் திட்டஉத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் நிவாரணப்பொதிகளை வழங்கிவைத்தனர்.

ஏலவே கல்விமற்றும் சமுக செயற்பாட்டாளர் இணைப்பாளர் சோ வினோஜ்மாரின் ஏற்பாட்டில் லண்டன் சைவமுன்னேற்றச்சங்கம் சுவிஸ் சூரிச் 'அன்பேசிவம்' பிரிட்டன் 'சிவகாமி அறக்கட்டளை நிதியம்' போன்ற அமைப்புகளால் அம்பாறை மாவட்டத்திலுள்ள வளத்தாப்பிட்டி பளவெளி அட்டப்பள்ளம் காரைதீவு வீரச்சோலை மண்டானை காயத்ரிகிராமம் மத்தியமுகாம் ஆகிய பகுதிகளில் உலருணவு நிவாரணம் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -