குடும்பத்தகராறு காரணமாக காரைதீவில் குடுபஸ்த்தர் ஒருவர் தூக்கில் தொங்கித் தற்கொலை!

காரைதீவு நிருபர் சகா-
ம்மாந்துறை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காரைதீவில் குடும்பத்தகராறு காரணமாக நபர் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (07) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

சனசமூக வீதி காரைதீவு 12 வசித்துவந்த 42 வயது நிரம்பிய கிருஸ்ணபிள்ளை தட்சணாமூர்த்தி (கண்ணன்) என்பவரே இவ்வாறு தூக்கில்தொங்கி உயிரை மாய்த்துக்கொண்டடவராவார்.
இவர் 3 ஆண் பிள்ளைகள் 2 பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலைக்குக்கொண்டு செல்லப்பட்டது.

சம்பவ இடத்திற்கு காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் வருகைதந்து நிலைமைகளை கண்டறிந்து
இதன் போது விசாரணைகளை துரிதமாக முன்னெடுத்து குடும்பத்தினருக்கு உதவி செய்யுமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -