வீடொன்றில் போதைப்பொருட்களை பொதி செய்து கொண்டிருந்த நிலையில் 3பேர் கைது..!

பாறுக் ஷிஹான்-

வீடொன்றில் போதைப்பொருட்களை பொதி செய்து கொண்டிருந்த நிலையில் கைதான 3 சந்தேக நபர்களை தொடர்விசாரணை மேற்கொள்ளுமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று அனுமதி வழங்கி உள்ளது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத்திற்கு கடந்த 11 ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருட்கள் பொதி செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றினை அடுத்து நிந்தவூர் பகுதியில் உள்ள கடற்கரைப்பகுதி வீடொன்று சுற்றி வளைக்கப்பட்டது.

இதன் போது குறித்த சோதனை நடவடிக்கையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி விஜயராஜா உப பொலிஸ் பரிசோதகர் ஜனுசன் உள்ளிட்ட விசேட பொலிஸ் குழுவினர் ஈடுபட்டதுடன் குறித்த வீட்டின் உள்ளே கெரோயின் போதைப்பொருட்களை பொதி செய்து கொண்டிருந்த 3 சந்தேக நபர்களை கைது செய்தனர்.

கைதான மூவரிடம் இருந்து 58 கிராம் 80 மில்லிகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் மேலதிக விசாரணைக்காக ஞாயிற்றுக்கிழமை(12) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையை பெற்று விசாரணை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அத்துடன் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -