இலங்கையில் தனிமைப்படுத்தலில் இருந்த முதல் வெளிநாட்டுக் குழு வெளியேறியது!


கொரோனா தொற்றுக்குள்ளாகிய வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதந்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் சிகிச்சை பெற்றுவந்த முதலாவது குழு அந்தந்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியது.

கொரோனா தடுப்பு முகாங்களான புனானை மற்றும் கந்தகாடு ஆகிய முகாம்களில் கடந்த 14 நாட்களாக தடுத்துவைக்கப்பட்டு மருத்துவக் கண்கானிப்பில் வைக்கப்பட்டவர்கள், எவ்விதமான நோய்த்தொற்றும் இல்லாத நிலையில் அவர்களின் குடுப்பங்களுடன் இணைக்கும் பணியை இராணுவம் மேற்கொண்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வருகைதந்த 311 பேர் அடங்கிய குழுவொன்றே இவ்வாறு தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து வெளியேறியதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கந்தகாடு தடுப்பு முகாமிலிருந்து 108 பேரும், புனானை தடுப்பு முகாமில் இருந்து 203 பேரும் என இத்தாலி, ஈரான் மற்றும் தென்கொரியாவில் இருந்து வருகை தந்தவர்களே இவ்வாறு சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.

மத்தாறைப் பகுதிக்கு இரண்டு பேருந்துகள் மூலமாக 80 பேரும் கொழும்புக்கு இரண்டு பேருந்துகள் மூலமாக 125 பேரும் கண்டிக்கு ஒரு பேருந்தில் 33 பேரும் இன்று காலை இராணுவத்தினர் அழைத்துசென்ல்லப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குத் தேவையான மதிய உணவு உள்ளிட்ட உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -