மாவடிச்சேனை பிரதான வீதியோரம் சடலம் மீட்பு


எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிச்சேனை பிரதான வீதியோரம் இன்று (21) சனிக்கிழமை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டம் அமுல் நிலையில் உள்ளபோது ஒருவர் மயங்கி வீதியில் கிடப்பதைக் கண்ட சிலர் பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளனர்.

குறித்த இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார் அங்கு கிடந்தவரை சடலமாக மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய காசிம் பாவா அசனார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -