ஓட்டமாவடி பிரதேச சபையினால் கிருமிகளை அழிக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு.

எச்.எம்.எம்.பர்ஸான்-
நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கிருமிகளை அழிக்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள், பொது இடங்கள், வீட்டு நுழைவாயில்கள் உட்பட பல இடங்களுக்கு கிருமிகளை அழிக்கும் வேலைத்திட்டம் இன்று (22) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி அவர்களின் தலைமையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் உதவியுடன் நடைபெற்ற இவ் வேலைத்திட்டத்தில் உப தவிசாளர் யூ.எல்.அஹமட், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனப்பலரும் இவ் வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -