இந்த கிராமத்து வாசியொருவர் கொரோணா தொற்றுக்கு உள்ளாகி அங்குள்ள அநேக வீடுகளுக்கு சென்று வந்தமையால் அப் பகுதியினர் வெளியில் செல்வதையோ அல்லது வெளியில் உள்ளோர் உள்ளே நுழைவதையோ அரசு நேற்றைய தினம் (27) தடை
செய்தது. இதனடிப்படையில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுளனர்.
டுபாயிலிருந்து கடந்த 19ம் திகதி இலங்கை வந்த இக் கிராமவாசி 6 நாட்களாக அக்கிராமத்தின் அநேக வீடுகளுக்கு சென்று வந்துள்ளார். இன்று அவரது தந்தை மற்றும் சகோதரிக்கு கொரோணா பாதிப்பு காணப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை சுவசரிய 1990 அம்பியூலன்சில் களுத்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளார்கள்.
