பெண்கள், சிறுவர்கள் குறித்த குற்றங்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

ஐ. ஏ. காதிர் கான்-

ர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பொலிஸ் தலைமையகத்தினால் விசேட விழிப்புணர்வு நடவடிக்கை (08) மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, பொதுப் போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்தும்போது,
பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகம் தொடர்பில் பொதுமக்களைத் தெளிவூட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், 'பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகம் தொடர்பிலான குற்றங்களுக்கு 5 வருடங்கள் வரையிலான சிறைத் தண்டனை வழங்கப்படும்' எனும் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களும் இதன்போது பஸ்களில் ஓட்டப்பட்டன.
1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தண்டனைக் கோவைச் சட்டத்தின் 345 ஆம் பிரிவிற்கு அமைய, இத்தண்டனை வலிதாவதோடு, பிடியாணையின்றி கைது செய்யப்படக் கூடிய குற்றமாக இது கருதப்படுகின்றது.
புறக்கோட்டை பெஸ்டியன் வீதியிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்ற இவ்விழிப்புணர்வு நடவடிக்கையின்போது, இ.போ.ச. மற்றும் தனியார் பஸ்களில், இது தொடர்பிலான விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை பொலிஸார் ஒட்டினர்.

பொலிஸ், சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினால் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பெண்கள், சிறுவர்கள் தொடர்பிலான குற்றங்கள் தொடர்பில் அறிவிக்க
011 2444444
என்ற
தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -