சென்னையிலிருந்து இலங்கை வந்தவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும்


டந்த 14 நாட்களுக்குள் சென்னையிலிருந்து இலங்கை வந்தவர்கள் இருப்பார்களாயின் அவர்கள் உடனடியாக அது தொடர்பில் உரிய சகாதார பிரிவினருக்கு அறிவிக்க வேண்டும்.

இவர்கள் தமது பிரதேச சுகாதார பரிசோதகர்கள் அல்லது சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு அறிவித்து தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க இன்று தெரிவித்தார்.

இன்றைய (28) தினம் 4 கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவானதாக தெரிவித்த அவர் இவர்களுடன் சேர்த்து மொத்தமாக கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 110 என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நால்வரின் இருவர் சென்னையிலிருந்து இலங்கை வந்தவர்கள். மேலும் இருவர் கடந்த 4 நாட்களுக்குள்; சென்னையிலிருந்து இலங்கை வந்தவர்கள்.

இவர்கள் அனைவரும் இலங்கையர். எனவே சென்னையிலிருந்து கடந்த 14 நாட்களுக்குள் இலங்கைக்கு வந்தவர்கள் இருப்பார்களாயின் உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க வலியுறுத்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -