அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குடிபெயர்ந்துள்ள ஹரி மற்றும் மேகன் தம்பதி, தங்கள் பாதுகாப்புக்கான செலவை அவர்களே செலுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹரி தம்பதி கனடாவில் நிரந்தரமான குடியேறியதாக கூறப்பட்டு வந்த நிலையில், அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில், இங்கிலாந்து ராணி மற்றும் அரச குடும்பத்துக்கு தான் சிறந்த நண்பன், அபிமானி என்று குறிப்பிட்டு டுவிட்டரில் டுவீட் செய்துள்ள அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட ட்ரம்ப், அரச குடும்பத்தை விட்டு வெளியேறிய ஹரி தம்பதியின் பாதுகாப்புக்கான செலவை அமெரிக்கா அரசாங்கம் ஏற்காதென்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க அரசாங்கத்திடம் உதவி கோரும் எண்ணம் இல்லை என இதற்கு ஹரி தம்பதியின் செய்தி தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.