முன்னறிவித்தலின்றி நீர்வெட்டு: பாவனையாளர்கள் அசெளகரியம்.


எச்.எம்.எம்.பர்ஸான்-
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நீர் வெட்டு அமுல்படுத்துவதனால் கல்குடா பகுதியிலுள்ள குடிநீர் பாவனையாளர்கள் மிகவும் அசெளகரியத்திற்கு உள்ளாவதாக தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலமாக கல்குடா தொகுதி வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடை ஆகிய பகுதிகளுக்கு வழங்கப்படும் நீர் விநியோகம் இவ்வாறு முன்னறிவிப்பு இன்றி நீர் வெட்டு இடம்பெற்று வருகிறது.

இதன் காரணமாக பாவனையாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுத்து நீர் வெட்டும் நேரங்களை முன்கூட்டியே அறிவிப்பதன் மூலம் பாவனையாளர்கள் அசெளகரியங்களிலிருந்து தவிர்ந்து கொள்ள முடியும் என்று குடிநீர் பாவனையாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -