சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 8, 9 மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தலைமைத்துவப் பயிற்சிப் பாசறை அண்மையில் நடைபெற்றது.


எம்.எஸ்.எம். ஸாகிர்-

சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 8, 9 மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தலைமைத்துவப் பயிற்சிப் பாசறை அண்மையில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைசால் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வானது பாடசாலை ஆசிரியர் கே.எம். நாஸரின் ஒரு செயற்றிட்டமாகும். இதில் பாடசாலை பிரதி அதிபர் எம்.சி.என். றிப்கா, உதவி அதிபர் எம்.எச். நுஸ்ரத் மற்றும் ஆசிரியர் எம்.எஸ்.எஸ். சிப்லி, நுஸ்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் மாணவர்களுக்கான வீதி ஒழுங்கு மற்றும் ஏனைய சட்டங்கள் பற்றி பொலிஸ் சாஜன் ஏ.எல். ஹிதாயதுள்ளா 65832 மற்றும் எச்.ஆர்.எஸ். டபிள்யு. குமார - பொலிஸ் கான்ஸ்டபிள் 46382 ஆகியோர் விரிவுரை நடாத்தினர்.

மேலும் மாணவர்களின் ஒழுக்க விழுமியங்கள் பற்றி தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ.ஆர்.எம். அன்சார் பயிற்சி நடாத்தினார்.

மாணவர்களுக்கான உணவுப்பழக்க வழக்கங்கள் பற்றியும் சத்தான உணவின் அவசியம் பற்றியும் தொற்றா நோய்கள் தொடர்பாகவும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்தியர் ஏ.எச்.எம். திலீப் மபாஸ் விரிவுரையாற்றினார்.

இறுதியாக மாணவர்களுக்கான தலைமைத்துவ செயற்பாடுகள் தொடர்பாக தென்கிழக்கு பல்கலைக்கழக கலைத்துறைப் பீடாதிபதி டாக்டர் ஏ. ரமீஸ் பயிற்சி அளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -