அனுராதபுரத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது


கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு பேர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இனங்காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரை 76 ​பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இருவர் பொலன்னறுவை வைத்தியசாலையிலும் மற்றுமொருவர் அநுராதபுரம் பொது வைத்தியசாலைகளில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்கள் மூவரும் கண்காணிப்பு மத்திய நிலையங்களில் ஏற்கனவே சிகிச்சை பெற்றவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஐ.டி.எச் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான இருவர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தேசிய வைத்தியசாலையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரை நாடு பூராகவும் உள்ள 18 வைத்தியசாலைகளில் 245 பேர் கொரோனா தொற்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -