கல்முனை பொலிஸார் ,விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் மற்றும் மாநகர சபை ஒன்றிணைந்து கல்முனை நகரை சுத்தப்படுத்தும் பணியை இன்று (28.03.2020) ஆரம்பித்தனர்.

.எல்.எம்.ஷினாஸ்-ஜனாதிபதி செயலகம் மற்றும் சுகாதார அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைய கொவிட் 19 எனும் கொரோணா வைரஸ் தொற்று நோயை தடுக்கும் நோக்கில் கல்முனை பொலிஸார்,விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் மற்றும் கல்முனை மாநகர சபை என்பன ஒன்றிணைந்து நகரை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று (28.03.2020) கல்முனை மாநகரத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கல்முனை பிரதான பஸ் நிலையம்,பொதுச் சந்தைகள், தனியார் பஸ் தரிப்பிடங்கள், அரச-தனியார் அலுவலகங்கள், சத்தோச விற்பனை நிலையங்கள், கடைத் தெருக்கள் என பொதுமக்கள் வந்துசெல்லும் பல இடங்கள் தொற்றுநீக்கி விசிறப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.

இதில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க ஜெயசுந்தர, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த, சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.ஏ.வாஹிட், பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி எம்.எச்.ஏ.மதுரங்க, கல்முனை மாநகர சபை ஆணையாளர் எம்.சி.அன்சார், பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட மாநகர சபை அலுவலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -