ஒரே வாரத்தில் முதலீடு செய்த 11,424 Million ரூபாயை திரும்ப பெற்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

2020ம் ஆண்டின் February 19ம் திகதிக்கும்  February 26ம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு வார காலத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அரச காப்பீட்டு பத்திரங்களில் முதலீடு செய்திருந்த 1,142 கோடி 40 லட்சம் ரூபாய் பணத்தை திரும்ப பெற்றுள்ளனர்.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் படி 2020ம் ஆண்டு February மாதம் 19ம் திகதி வரை அரச காப்பீட்டு பத்திரங்களில் 10 ஆயிரத்து 266 கோடியே 40 லட்சம் ரூபாய் பணத்தை வெளிநாட்டினர் முதலீடு செய்திருந்தனர்.

அந்த தொகையானது பெப்ரவரி மாதம் 26ம் திகதி 9,124 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதன் அடிப்படையில் ஒரு வார காலத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 1142 கோடியே 40 லட்சம் ரூபாவை திரும்ப பெற்றுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -