105 தோட்ட பிரிவுகளில் கோவிட் 19 வைரஸ் தொற்று நீக்கி பிரயோகம்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
லகமே அச்சுறுத்தி வரும் கொரானா கொவிட் 19 வைரஸ்சினை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தோட்டப்பகுதிகளில் கொவிட் வைரஸ் பரவுவதனை தடுப்பதற்குரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. என்று பலர் குற்றும் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில் நோர்வூட் பிரதேச சபை தலைவர் கே.கே. ரவி அவர்களின் ஏற்பாட்டில் கொவிட் 19 வைரஸ் பரவுவதனை கட்டுப்படுத்த இன்று (28) திகதி நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட சுமார்; 105 தோட்ட பிரிவுகளில் கிருமி தொற்று நீக்கி பயன்படுத்தப்பட்டன.
தோட்ட நிர்வாகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த வேனை திட்டத்திற்கு தோட்ட நலன்புரி உத்தியோகஸ்த்தர்கள் தோட்டத்தில் இளைஞர்கள் இதற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
இதன் போது பிரதேச சபைத தலைவர் அவர்களினால் தோட்டங்களுக்கு தொற்று நீக்கி மருந்துகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த தொற்று நீக்கி மருந்துகள் பொகவந்தலா, நோர்வூட், புளியாவத்த,டிக்கோயா,ஆகிய பிரதேசங்களை அண்டிய தோட்டங்களுக்கு பிரயோகிக்கப்பட்டன.
இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில் கொவிட் 19 என்ற வைரஸ்ஸின கட்டுப்படுத்து நகரங்களில் முன்னெடுத்த செயப்பாடுகள் தோட்டங்களில் முன்னெடுக்க படவில்லை. காரணம் நோர்வூட் பிரதேச சபைக்கு 105 தோட்டங்கள் உள்ளன. இதில் இந்த திட்டத்தினை முன்னெடுப்பதற்கு எம்மிடம் ஆளனி பற்றாக்குறை நிலவுகின்றது.இந்நிலையில் தான் தோட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொண்டு தற்போது 105 தோட்டங்களிலும் தொற்று நீக்கி பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன்.
இந்த செய்த்திட்டத்தி;ற்கு தோட்ட நிர்வாகமும்,இளைஞர்களும் பூரண் ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றன.
ஆகவே மக்களை பாதுகாப்பதற்கு உள்ள அத்தனை திட்டங்களையும் எதிர்க்காலத்தில் முன்னெடுக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -