மின்வெட்டு குறித்து விசாரணை செய்ய விசேட குழு நியமனம்

ஐ. ஏ. காதிர் கான்-

ந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று மேற்கொள்ளப்பட்ட மின்வெட்டு குறித்து விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆம் திகதி இலங்கை மின்சார சபையானது, மின்சக்தி அமைச்சின் எந்தவித அனுமதியுமின்றி சில பகுதிகளில் இரண்டு மணி நேர மின்வெட்டை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து அரசாங்கத்திற்கு பொதுமக்கள் அறிவித்துள்ளனர். 

இது தொடர்பாக ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஹேமந்த சமரகோன் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

இதன் ஏனைய உறுப்பினர்களாக, பேராசிரியர் ராஹுல அதலகே, ஈ.ஏ. ரத்னசீல, சுலக்‌ஷன ஜயவர்தன ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இது தொடர்பில் எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -