துருக்கி உணவுகள் பெப்ரவரி 27 தொடக்கம் மாா்ச் 07 ,2020ஆம் திகதி வரை உணவகம் இலங்கையா்களுக்கு இங்கு வரும் சுற்றுலா பிரயாணிகளுக்கும் பரிமாறப்படுகின்றன. இந் நிகழ்வினை இலங்கையில் துருக்கி நாட்டுத்துவா் டிமெயிட் ஸ்கெரிச்சிகெழு சம்பிரதாய பூர்வாமக 27ஆம் திகதி இரவு கொழும்பு கொம்பனி வீதியில் உள் ளகில்டன் ரெசிடனில் பிளோ தளத்தில் ஆரம்பித்து வைத்தாா்.
இவ் உணவுகள் விற்பனையும் காட்சிகள் தொடா்ந்து 10 நாட்களுக்கு பி.பகல் 07-10 மணிவரை பரிமாறலாம். இரவு உணவு ருபா 3500 வுக்கு விற்கப்படுகின்றன இந் நிகழ்வினை துருக்கி எயாா் லைன் விமான நிறுவனம், துருக்கி கில்டன் இலங்கை கில்டன் ரெசிடன்சும் அனுசரனை வழங்கியுள்ளது. அத்துடன் கொழும்பு கில்டன் ரெசிடன்ஸ் பொது முகாமையாளா் லின்டா ஜிபிங் இங்கு உரையாற்றினாா்.
துருக்கி நாட்டில் இருந்து உணவு தயாரிப்பில் பிரசித்தி பெற்ற இரண்டு ”செப்” உணவுதயாரிப்பாளா்கள் இலங்கை வந்துள்ளனா். இவா்களது கைவண்னத்தில் துருக்கியின் பண்டைய காலமான ஒட்டமன் ஆட்சிக் காலத்தில் கிராமத்தில் தனக்கு ஊட்டிய தனது தாய் தனக்கும் இவ் வகையான துருக்கி உணவு வகைகளை தயாரிப்பதற்கு சொல்லித் தந்தாகவும் அதனை தான் தயாரிப்பதற்கும் பழகிக் கொண்டதாக அலி டிமிர் கூறினாா்.