சாய்ந்தமருது பொலிவேரியன் ஐக்கிய விளையாட்டு மைதான சுற்று அமையவுள்ள வேலி நிர்மாணத்தினை தனது சொந்த நிதியில் ஆரம்பித்து வைத்தார் முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும் , மெற்றோபொலிடன் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சிரேஸ்ட பிரதி அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் .
சாய்ந்தமருது - மாளிகைக்காடு விளையாட்டு சம்மேளனம் விடுத்த வேண்டுகோளின் பேரில் சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற கண்காட்சி கிறிக்கட் போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கலாநிதி சிராஸ் மீராசாயஹிப் சுமார் 5 இலட்சம் ரூபா சொந்த நிதியில் மைதானத்தை சுற்றி இட இருக்கும் வேலிக்கான பொருட்களை இந்த நிகழ்வின் போது விளையாட்டுக்கழகங்களின் சம்மேளன பிரதி நிதிகளிடம் கையளித்தார்.
சாய்ந்தமருது - மாளிகைக்காடு விளையாட்டு சம்மேளனம் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களுக்கு மகத்தான வரவேற்பளித்தததுடன் பொன்னாடை போரத்தி நினைவுச் சின்னமும் வழங்கி வைத்தனர.



