சுதந்திர தினத்தை முன்னிட்டு மருதமுனையில் இரத்ததான முகாம்.

ஏ.எல்.எம்.ஷினாஸ்-
திர்வரும் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை ஏற்பாடு செய்த மாபெரும் இரத்ததான முகாம் இன்று (02.02.2020) மருதமுனை மசூர் மௌலானா வீதியில் அமைந்துள்ள கிளை அலுவலகத்தில் தலைவர் எம்.எச்.ஏ.அஜிமிர் தலைமையில் நடைபெற்றது.

கல்முனை ஆதார வைத்திய சாலையின் இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து ஐந்தாவது ஆண்டாக தொடர்ச்சியாக நடைபெறுகின்ற இந்த இரத்ததான நிகழ்வில்; இரந்த வங்கிப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் என்.ரமேஸ் தலைமையிலான வைத்தியசாலை அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து இரத்தங்களை சேகரித்து கொண்டனர்.

அடுத்தவருடைய உயிரை பாதுகாப்பதற்கு தனது இரத்தத்தை நன்கொடையாக வழங்குவது எல்லா நன்கொடைகளிலும் மிகச்சிறந்த நன்கொடையாகும். இனம், மதம், மொழி வேறு பாடுகளை கடந்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மேற்கொண்டு வரும் இந்தப்பணிக்கு வைத்தியசாலை நிருவாகத்தினர் தமது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
இந்த இரத்த தான முகாமில் ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் கலந்து கொண்டு இரத்தம் வழங்கினார்கள்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -