பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஐ.தே.கட்சியில் குடும்பிச்சண்டை-வன ஜீவராசிகள் இராஜங்க அமைச்சர் விமலவீர திஸ்ஸாநாயக்க

பாறுக் ஷிஹான்-
பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஐ.தே.கட்சியில் குடும்பிச்சண்டை தொடங்கிவிட்டது. ஆனால் பொதுத் தேர்தலை வெற்றிபெறுவதாக அவர்கள் தெரிவிப்பது கேலிக்கையானது என ஜீவராசிகள் இராஜங்க அமைச்சர் விமலவீர திஸ்ஸாநாயக்க தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் மாவடிப்பள்ளியில் சனிக்கிழமை(1) மதியம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது தேர்தல் காலம் ஆரம்பித்துள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் தலைமைத்துவ போட்டி ஏற்பட்டுள்ளது.அந்த கட்சியில் தலைவர் தான் முழு அதிகாரம் படைத்தவர்.ஆனால் கட்சியில் ஜனநாயகம் இல்லை.பெயருக்கு ஜனநாயகம் மட்டுமே உள்ளது.இந்த கட்சியில் தான்தோன்றித்தனமாக தலைவர் மாத்திரமே முடிவுகளை எடுக்கின்றார்.இதனால் எமக்கு தேர்தலில் வெற்றி பெறுவது இலகுவாக இருக்கும் என கூறினார்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -