நூருல் ஹுதா உமர்-
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிக்கமைவாக 1 லட்சம் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் பலநோக்கு அபிவிருத்தி செயலணி வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைவாக கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதற்கான நேர்முகப்பரீட்சைகள் பிரதேச செயலகத்தில் 3வது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் தொழில் வாய்ப்புக்காக 2624 இளைஞர், யுவதிகள் விண்ணப்பித்துள்ளனர்.
கல்முனை பிரதேச செயலாளர் அல் ஹாஜ் எம்.எம் நஸீர் அவர்களின் வழிகாட்டலில் பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லா, மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஏ.எம் எச் மனாஸ் மற்றும்,கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இராணுவ மேஜர், கெப்டன் தரத்திலான உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் நேர்முகப் பரீட்சைகள் சிறப்பாக நடைபெற்ற வருகின்றது.
இவ் நேர்முக பரீட்சைகள் கடந்த (26) புதன்கிழமை முதல் எதிர்வரும் சனிக்கிழமை (29) வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.