ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்கள் இருவர் சாதனை.

எச்.எம்.எம்.பர்ஸான்-

வெளியாகியுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்கள் இருவர் சாதனை படைத்து பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசலையின் அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது பாடசாலை மாணவர்களான முஹம்மது இஸ்மாயில் முஹம்மது பாஹிம் பொறியியல் தொழிநுட்ப பிரிவில் 3 ஏ சிறப்பு சித்திகள் பெற்று மாவட்டத்தில் முதல் மாணவனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, தேசியத்தில் 21 வது இடத்தையும் பிடித்துள்ளார்.

அத்தோடு ரசீத் கான் ஹாஜி நுஸ்ரத் சுகைலா எனும் மாணவி உயிர் முறைமைகள் தொழிநுட்ப பிரிவில் 3 ஏ சிறப்பு சித்தி பெற்று மாவட்டத்தில் 2 ம் இடத்தைப் பெற்றுள்ளதோடு, தேசியத்தில் 13 ம் இடத்தையும் பெற்றுள்ளார்.

சாதனைகளை நிலைநாட்டி பாடசாலைக்கு பெருமை சேர்த்து தந்துள்ள மாணவர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும், ஒத்துழைப்புக்களை வழங்கிய பெற்றோர்களுக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன் என்று அதிபர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -