சாய்ந்தமருது பொலிவேரியன் ஐக்கிய விளையாட்டு மைதானதம் புனரமைப்பு..!

அஸ்ஹர் இப்றாஹிம்-

சாய்ந்தமருது பொலிவேரியன் ஐக்கிய விளையாட்டு மைதானத்தை இப்பிரதேசத்தின் சிறந்ததொரு விளையாட்டு மைதானமாக அபிவிருத்தி செய்யும் வகையில் சாய்ந்தமருதில் உள்ள விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனம் முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும் அகில இலங்கை மக்கள் கட்சியின் முக்கியஸ்தருமான கலாநிதி . சிராஸ் மீராசாஹிப் அவர்களை அவரின் இல்லத்தில் சந்தித்திருந்தனர்.

இம் மைதான விடயமாக அகில இலங்கை மக்கள் கட்சியின் தேசிய தலைவர் றிசாட் பதியுத்தீன் அவர்களின் கவனத்திற்கு கலாநிதி . சிராஸ் மீராசாஹிப் கொண்டு வந்ததனையடுத்து அவரின் பணிப்புரைக்கமைய இன்று( 20 ) சாய்ந்தமருது ஐக்கிய விளையாட்டு மைதானத்துக்கு கலாநிதி . சிராஸ் மீராசாஹிப்பின் இணைப்பாளர்கள் இந்த மைதானத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர தேவையாக இனங்கானப்பட்ட வேலைத்திட்டங்களை பார்வையிட்டனர்

இதன் போது சாய்ந்தமருது விளையாட்டுக்கழக சம்மேளனம்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -