சலீம் றமீஸ், எம்.வை.அமீர்-
இலங்கை, தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற IntSym 2019 ஆய்வரங்கில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த ஆய்வாளர்களுக்கு சான்றிதல்கள் வழங்கிவைக்கப்பட்டவேளை.
தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற உள்நாட்டு, வெளிநாட்டு சர்வதேச ஆய்வாளர்கள் பங்கு கொண்ட ஒன்பதாவது ஆய்வு மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பல்லைக்கழக கலை,கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஆய்வரங்கின் இணைப்பாளர் கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர், நூலகர் எம்.எம்.றிபாய்தீன், அரசியல் துறைத் தலைவர் கலாநிதி எம்.எம்.பாஸீல், மொழித்துறை பேராசிரியர் றமீஸ் அப்துல்;லாஹ், பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல், மலேசிய மலே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எட்மன்ட் றிரன்ஸ் கொமஸ் உட்பட பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.