இன்று(02) திங்கட்கிழமை ஆரம்பமாகும் க.பொ.த. சாதாரணதரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஆசிவேண்டி கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடும் ஆசீர்வாதம் வழங்கலும் இடம்பெற்றது.
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்கள் ஆசியுரை வழங்கினார். தொடர்ந்து தான்தோன்றீஸ்வரருக்கு விசேட பூஜை இடம்பெற்றது.
பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் அனைவரும் சித்தியடையவேண்டுமென இவ்விசேட பிரார்த்தனை நிகழ்வு இடம்பறெ;றது.
ஆலயபிரதமகுருசிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்கள் சிவஸ்ரீ வ. ஜோதிலிங்ககுருக்கள் ஆகியோரால் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்க்கு எழுதுகருவிகளும் பிரசாதமும் ஆசியுடன் வழங்கப்பட்டன.
மண்முனை தேன்மேற்குப்பிரதேச இளைஞர்சேவை மன்ற உத்தியோகத்தர் அ.தயாசீலன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆலயவண்ணக்களர்இ.சாந்தலிங்கம் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.