இதற்கு தேவையான வாகன வசதிகளை கல்முனை மாநகர கௌரவ மேயர் ஏ. எம். றக்கிப், ஆணையாளர் எம்.சி. அன்சார் ஆகியோர் ஏற்பாடு செய்துகொடுத்தனர். இன்று விடுமுறை தினமாக இருந்தும் மாநகர சபையின் உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.
இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் உறுப்பினர்களோடு, பொதுமக்களும் சேர்ந்துகொண்டதுடன், தாமாகவே தாகம் தீர்க்கும் பானங்களை வழங்கினர்.
காலை உணவை கல்முனை Taj Restaurant வழங்கியிருந்தது.
துப்புரவு செய்யப்பட்ட குறித்த இடத்தை மேற்கொண்டும் குப்பைகளை வீசி அசிங்கப்படுத்தாமல், சுத்தமாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அத்துடன், தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இயற்கையை நேசிக்கும் மன்றத்தினர் திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.
திண்மக் கழிவுகள் தொடர்பான பிரச்சினைக்கு தற்காலிகமாகவேனும் சில தீர்வுகளைக் காண்பதற்கு கல்முனை மாநகர கௌரவ மேயருடன் அண்மையில் சந்திப்புகளை ஏற்படுத்தி பேசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி DNA-


























