சஜித்துக்காக வாக்களித்த மக்களுக்கு நன்றி


சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:

நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவும் சிறந்த அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்காகவும் சஜித் பிரேமதாசா அவர்களை ஜனாதிபதியாக்கும் நோக்கில் எமது மக்கள் வாக்களித்தனர்.
தூரஸ்திஷ்டவசமாக அவரால் வெற்றி பெற முடியவில்லை. இருந்தாலும், எமது மக்கள் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கில் கூடுதல் பங்களிப்பை வழங்கினர்.அவருக்கு வாக்களித்தது மாத்திரமன்றி தேர்தல் காலத்தில் களத்தில் இறங்கியும் செயற்பட்டனர்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேண்டுகோளை ஏற்று எமது மக்கள் சஜித்துக்கு வாக்களித்தனர்.அந்த மக்கள் அனைவருக்கும் நான் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இனிவரும் காலங்களிலும் மக்கள் தொடர்ந்தும் எம்முடன் இவ்வாறு இணைந்திருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
அதேவேளை,புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.ஜனநாயகத்தை மதித்து நீதியான ஆட்சியை அவர் நடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.-என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -