புத்தளத்திலிருந்து ஒயாமடுவினுடாக முஸ்லிம் வாக்காளர்களை ஏற்றிக்கொண்டு மன்னார் நோக்கிய பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு செந்தமான பஸ் தொடரணி மீது இன்று காலை அனுராதபுரம், தந்திரிமலை பகுதியில் வைத்து துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டுள்ளதை CEMV உறுதி செய்துள்ளது.
இதேவேளை பஸ் போக்குவரத்தை தடை செய்யும் நோக்கில் பெரிய மரமொன்றை தறித்து பாதையின் குறுக்கே வீழ்த்தப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
சம்பவத்தை அறிந்த வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ்பாரூக் உடனடியாக விரைந்து உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான மேற்படி பஸ்ஸில் பயணித்த மக்களின் பாதுகாப்புக்காக வவுனியா செட்டிக்குளம் பொலீஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் செட்டிக்குளம் பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -