ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட பொருளாளரும், அக்கட்சியின் உயர்பீட உறுப்பினரும், யஹியாகான் பௌண்டேஷன் அமைப்பின் ஸ்தாபக தலைவருமான ஏ.சி யஹ்யாகானின் இல்லத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாஸவை ஆதரித்து பிரசார காரியாலயம் வெள்ளிக்கிழமை(8) மாலை 6 மணியளவில் திறந்து வைக்கும் போது அதில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில்
சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை கிடைக்க வேண்டும் என்று விரும்பும் எமது சாய்ந்தமருது பிரதேச மக்கள் அன்னத்துக்கு வாக்களிக்க தயாராகி வருகின்றனர் எனவே சுயேட்சைகுழு உறுப்பினர்களும் ஜுப்பள்ளிவாசல் நிர்வாகமும் ஏலவே எடுத்த முடிவுகளை மறுபரிசிலனை செய்ய வேண்டும்.மாறாக இன்று ஏனைய பிரதேச வாத அமைப்புகளும் பல அரசியல் கட்சிகளின் அடியாட்களுடன் இணைந்து பிரதேச சபை முன்னிறுத்தி தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம்.
எனவே இவ்வாறான செயற்பாடுகளை உடைத்தெறிந்து சாய்ந்தமருது மக்களின் நலன்கருதி ஜூம்மாப்பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையினர் உயிரோட்டமான முறையிலும் கட்சி பேதங்கள் அற்ற நிலையிலும் செயற்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். என்று தெரிவித்தார்.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் உள்ளூராட்சி, மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம் ஜெமில்,ஏ.எல் தவம்,மற்றும் கல்முனை மாநகர சபை பிரதி மேயர் காத்தமுத்து கணேஸ்,கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர் அமீர்,எம்.எஸ் நிசார்(ஜேபி), கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.ஏ.பஸீர், எம்.ஐ.எம்.பிர்தெளஸ்,எம்.நஸார்த்தீன், கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கல்முனை மாநகர சபை வேட்பாளர்களாக களமிறங்கிய கட்சியின் முக்கியஸ்தர்களான ஏ.எம் பாமி,எம்.முபாரக் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .