வீடு ஒன்றின் பூட்டிய அறைக்குள் சடலமாக கிடந்த இரண்டு மாணவிகள் ..

னடாவில் வீடொன்றில் பூட்டிய அறைக்குள் இரண்டு மாணவிகள் சடலமாக கிடந்தமை அந்நாட்டு காவல்துறையை அதிர்ச்சியடையவைத்துள்ளதுடன் இது குறித்து தீவிர விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கனடாவில் உள்ள சர்ரே பகுதியில் இருக்கும் வீடு ஒன்றின் அறையில் இரண்டு மாணவிகள் சடலமாக கிடந்தனர். அதில் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இருவரும் யார் என்ற தகவல் தெரியாமல் இருந்தது.

இச்சம்பவம் குறித்து விசாரித்த பொலிசார் அதில் ஒருவர் இந்திய மாணவி என உறுதி செய்தனர். இதனை அடுத்து இந்தியாவிலிருந்த பெற்றோருக்கு தகவல் அனுப்பப்பட்டது.

இது குறித்து பேட்டியளித்த இந்திய மாணவியின் பெற்றோர், நேற்று காலை கனடாவிலிருந்து தொலைபேசி மூலம் அழைப்பு வந்தது. அதில் கனடா பொலிஸ் பேசுவதாக குறிப்பிட்டனர். மேலும் எங்களுக்கு ஒரு சோகமான செய்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர். அதாவது உங்களது மகள் கொலை செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்து தொலைபேசியை துண்டித்தனர். எங்களுக்கு வேறு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என கூறினர்.

உயிரிழந்த இந்திய மாணவி பிரப்லின் 2016 ஆம் ஆண்டு முதல் கனடாவில் கல்வி கற்று வந்தது குறிப்பிடத்தக்கது.ஐபிசி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -