தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரன் தலைமையிலான குழுவொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று(8) வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கொழும்பில் சந்திக்கவுள்ளது.
அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் எதிர்நோக்குகின்ற சவால்கள் தேவைகள் மற்றம் ஜனாதிபதிதேர்தலின்போது அம்பாறை தமிழ்மக்களின் வாக்களிப்பு எவ்வாறு அமையவேண்டும் என்பதைத் தீர்மானிப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.
அம்பாறை தமிழ்ப்பிரதேச சபைகளின் தவிசாளர்கள் புத்திஜீவிகள் அடங்கிய குழு அதற்கான திட்டமுன்வரைவினை தயாரித்துள்ளதாகவும் அதற்கு பிரதமர் ரணில் இணங்கும் பட்சத்தில் ஜனாதிபதி வேட்பாளர்சஜித்தை பூரணமாக ஆதரிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி சுகாதாரம் சமுக பொருளாதார விடயங்களை உள்ளடக்கியதாக இவ்வரைபு வரையப்பட்டுள்ளது.
கடந்தகாலங்களைப்போல் எவ்வித கோரிக்கைகள் அல்லது நிபந்தனைகளை முன்வைக்காமல் அரசுக்கு வழங்கிய ஆதரவால் எவ்வித பலனும்அம்பாறை த்தமிழ்மக்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் அவர்கள் பலகோணங்களிலும் நசுபக்கப்பட்டுவந்தார்கள். கட்சிகளும் கைகொடுப்பதில்லை. எனவே இனியும் அவ்விதம் தொடரஅனுமதிக்கமுடியாது.
இருப்பதையாவது தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனுக்கு புத்திஜீவிகள் பலத்த அழுத்தம் கொடுத்துவந்ததன் விளைவே இச்சந்திப்பு என குழுவின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இதுவரை யாரும் எதிர்பார்க்காதவகையில் அம்பாறை மாவட்டத்தமிழ்மக்களின் அரசியல் பாதை புதுவடிவம்பெறலாமென அப்பிரதிநிதி மேலும்தெரிவித்தார்.