மூதூர் பகுதியில் 20 மில்லிகிராம் ஐஸ் வகை போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவருக்கு ஒரு மாதம் கடுழிய சிறைதண்டனை

எப்.முபாரக்-

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 20 மில்லிகிராம் ஐஸ் வகை போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவருக்கு ஒரு மாதம் கடுழிய சிறைதண்டனை விதித்து மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று(15) உத்தரவிட்டார்.
ஆலீம் நகர், மூதூர், பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த. நபர் மூதூர் பிரதேச பாடசாலை அருகாமையிலிருந்து ஐஸ் வகை போதை பொருளை விற்பனை செய்து வருவதாக மூதூர் போதை பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இருபது மில்லிகிராம் ஐஸ் வகை போதைப் பொருளுடன் கைது செய்து பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டார்.

குறித்த நபருக்கு ஏற்கனவே பல போதைப் பொருட்கள் வைத்திருந்தமை போன்ற வழக்குகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -