தனியார் பஸ் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்து 03 வைத்தியசாலையில் அனுமதி


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்- 
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியில் இன்று (25) பகல் 3.15 மணிளவில் முச்சக்கரவண்டி ஒன்று தனியார் பஸ்ஸூடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணஞ் செய்த மூன்று பேர் கடும் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டனிலிருந்து மஸ்கெலியா நோக்கி சென்;று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றும் நோர்வூட் பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியுமே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்த விபத்தின் போது முச்சக்கரவண்டியில் நான்கு பேர் பயணஞ் செய்ததாகவும் இதில் மூன்று பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் இவர்களில் சிறுவர் ஒருவர் அடங்குவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தார்.
குறித்த விபத்து முச்சக்கரவண்டியின் சாரதியின் கவயீனம் காரணமாக ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட்பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -