வேன் ஒன்று தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளான சம்பவமொன்று நேற்று காலை இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டிலிருந்து வந்தோரை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து காத்தான்குடியில் விட்டு வரும்போது ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரானில் வைத்து தொலைபேசி கம்பத்தில் வேன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் வேனுக்கும் தொலைபேசி கம்பத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதோடு வேன் சாரதிக்கு காயம் ஏற்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.