தொலைபேசி கம்பத்தில் வேன் மோதி விபத்து : சாரதிக்கு காயம்.




எச்.எம்.எம்.பர்ஸான்-
வேன் ஒன்று தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளான சம்பவமொன்று நேற்று காலை இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டிலிருந்து வந்தோரை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து காத்தான்குடியில் விட்டு வரும்போது ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரானில் வைத்து தொலைபேசி கம்பத்தில் வேன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் வேனுக்கும் தொலைபேசி கம்பத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதோடு வேன் சாரதிக்கு காயம் ஏற்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -