பாடசாலையின் அதிபர் யூ.எல் நஸார் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பொறியியலாளர் அல் ஹாஜ் பர்ஹான்,
“சிறுவர்களின் வெற்றிக்கான நட்பான தேசம்” எனும் தொனிப்பொருளில் சாய்ந்தமருது கமு/கமு/ஜி.எம்.எம்.எஸ். வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாணவர்களது மகிழ்வுக்கு நாட்டினுடைய ஸ்திரத்தன்மை எவ்வாறு அமையவேண்டும் என்பது பற்றி உரையாற்றுமாறு என்னிடம் கோரப்பட்டது. மாணவர்கள் நாட்டினுடைய ஸ்திரத்தன்மை பற்றி அறிவதற்கு முன்னர் இஸ்லாம் என்ன கூறுகின்றது என்பதுபற்றி அறிய வேண்டியுள்ளது. எல்லாக்காலத்துக்கும் பொருத்தமான சகல வழிமுறைகளையும் அது நமக்கு எடுத்தியம்புகிறது.
ஒருவருடைய தனிமனித வாழ்வு குடும்ப வாழ்வு சமூக வாழ்வு என்பனதான் நாட்டின் ஸ்திரத்தன்மையில் பிரதிபலிக்கும் என்று கூறலாம். தனிமனித குடும்ப சமூக ஒழுக்க விழுமியங்களே நாட்டை ஸ்திரத்தன்மை மிக்கதாக ஆக்கக்கூடிய நல்ல பிரஜைகளை உருவாக்கும்.
ஒருசிலர் குறித்த ஒழுக்க விழுமியங்களை மீறியதன் காரணமாக இன்று நமது சமூகத்தைச் சேர்ந்த படிந்தவர்கள் முதல் பாமரர்கள் வரை சந்தேகக்கண்கொண்டு பார்க்கப்படுகின்றனர்.
நாட்டினுடைய ஸ்திரத்தன்மை மேம்படவேண்டும். அதனூடாக நமது எதிர்கால சந்ததிக்கான சிறந்த நாடாக நமது நாட்டை கட்டியெழுப்ப நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டும்.
இப்போது நமது மாணவர்கள் ஒரே பிரதேசத்துக்குள் பழக்கப்பட்ட ஆசிரியர்களால் கல்வியைப் பெற்று வருகின்றனர். குறுகிய வட்டத்துக்குள் இவர்களது அறிவைப் பகிர்ந்துகொள்ளும் அமைப்பு இருந்தாலும், இவர்களுக்கு ஏனைய பிரதேசங்கள், மக்கள் மற்றும் மொழிகள் போன்ற தெளிவுகளும் போதிக்கப்படவேண்டும் அதனூடாகவே புரிந்துணர்வு ஐக்கியம் என்பனவற்றை உருவாக்கி நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கக்கூடிய சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.
நமது மாணவர்களுக்கும் ஏனைய பிரதேச மாணவர்களுக்குமிடையேயான தொடர்பாடலை ஏற்படுத்தி அதனூடாக தேசிய ஒற்றுமைக்கு வழியமைக்க முடியும் எமது மாணவர்களை பிரதேச ரீதியாக சிந்திப்பவர்களாக உருவாக்காது தேசிய ரீதியாக சிந்தித்து செயற்படக்கூடியவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்
மாணவர்கள் வீட்டிலும் பாடசாலையிலும் புத்தகமும் கையுமாக இயந்திரமாய் உழைக்கும் இந்தக் காலகட்டத்தில் பாடசாலை சீருடை தவிர்த்து இன்றைய சிறுவர் தின கொண்டாட்டத்தில் இணைந்திருந்து சுதந்திரமாக மகிழ்வைப் பகிர்ந்து கொள்வது எமக்கெல்லாம் மகிழ்வைத்தருகிறது.
முழு உலகில் உள்ள சிறுவர்களும் கொண்டாடும் இன்றைய சிறுவர் தினநிகழ்வு இலங்கையில் “சிறுவர்களின் வெற்றிக்கான நட்பான தேசம்” என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகின்றது. இந்த எதிர்பார்ப்பை சிறுவர்களைவிட பெற்றோரே அதிகம் உணர்ந்து செயட்ப்படவேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.