இலங்கை கராத்தே சம்மேளனம் கிழக்கு மாகாண ரீதியாக நடாத்திய கராத்தே போட்டியில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்கள் பங்குபற்றி தேசிய போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது பாடசாலையைச் சேர்ந்த பதினொரு மாணவர்கள் குறித்த போட்டியில் பங்குபற்றி 2 தங்கப் பதக்கம், 1 வெள்ளிப் பதக்கம், 7 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்து தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
குறித்த போட்டியில் பங்குபற்றி தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும், மாணவர்களை பயிற்றுவித்த சுகாரி சொட்டக்கன் கராத்தே பயிற்றுவிப்பாளர் மௌலவி ஏ.ஆர்.நவாஸ் காஸிமி மற்றும் மாணவர்களை தயார்படுத்திய ஆசிரியர் எம்.எல். நஜீம் ஆகியோர்களுக்கு அதிபர் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.