அட்டனிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற தனியார் பஸ்ஸொன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் 28 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
அட்டன் பொகவந்தலா பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா மகுதியிலே 08/10 பிற்பகல் 03 மணியவில் விபத்து இடம்பெற்றுள்ளனர்
அட்டன் நகர பகுதியிலுள்ள பாடசாலைகளில் கல்விப்பயிலும் பொகவந்தலா பிரதேச மாணவர்களை ஏற்றிச்சென்ற பாடசாலை சேவை பஸ் வண்டியே இவ்வாறு பாதையை விட்டு விலகி 15 பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
விபத்தினால் பஸ்ஸில் பயணித்த 18 மாணவர்கள் உட்பட ஏனைய 10 பேருமாக 28 பேர் காயமுற்ற நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்
மேலதிக விசாணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .