எம்.என்.எம்.அப்ராஸ்-
அம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றிய
பட்டதாரிகளின் ஒன்று கூடலும் ஊடக சந்திப்பு இன்று (16)
காரைதீவு முச்சந்தியில்
இடம்பெற்ற இதன்போது இவ்வாறு தெரிவித்தார்
மேலும் உரையாற்றுகையில்
இது வரைக்கும்வழங்கப்பட்ட நியமனத்திற்க்கு மாற்றமாக இவ் அரசாங்கம் நியமனங்கள் அண்மையில்
வழங்கப்பட்டிருக்கின்றது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி பெற்றும் கூட எங்களுக்கு அரசாங்கம் சரியான தீர்வை வழங்கவில்லை இது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட சான்றிதலை புறக்கணிக்கும்
செயற்பாடாகவே காணப்படுகின்றது இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்
கடந்த அரசாங்கம் உள்வாரி ,வெளிவாரி என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்படட சான்றிதலை அடிப்படையாக வைத்து அனைவருக்கும் நியனமங்களை வழங்கியது ஆனால் தற்போது இன்று அவ்வாறான நிலை இல்லை
மீண்டும் மீண்டும் பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டால் எதிர்வரும் தேர்தல் நடைபெறும் தினம் அறிவிக்கப்படும் தினத்திலிருந்து மீண்டும் நாங்கள் சத்தியாகிரக போரட்டத்தை ஆரம்பிக்க எவ்வித தயக்கமும் காட்டமாட்டோம் என அரசாங்கத்திற்குதெரிவித்துக்கொள்கிறோம் மேலும் எதிர்வரும் தேர்தலின் முன் எங்களது தமிழ் முஸ்லிம் தலைமைகள் எங்கள் விடயத்தில் கரிசனை செலுத்த வேண்டும். மேலும் பாகுபாடின்றி அனைவருக்கும் நியமனம் வழங்க வேண்டும் என்றார்.