அக்கரைப்பற்று முகம்மதியாபுரம் ,தம்பிலுவில் ஆகிய இடங்களின் வைத்தியசாலைகளுக்கு புதிய கட்டிடங்கள்.



பைஷல் இஸ்மாயில் -

ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல்.அலாவூத்தீனின் அழைப்பின் பேரில் அக்கரைப்பற்று முகம்மதியாபுரம் யூனானி மருந்து உற்பத்திப் பிரிவுக்கான அடிக்கல் நடும் நிகழ்வும், தம்பிலுவில் கிராமிய வைத்தியசாலைக்கான சமயலறை மற்றும் மருந்துக் களஞ்சியசாலை போன்றவற்றுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு ஆகியன இன்று (22) கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளின் இணைப்பாளரும், நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்திய கலாநிதி எம்.ஏ.நபீல் இடம்பெற்றது.

இந்த கட்டிட அடிக்கல் நடும் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர், அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசிக், ஆயுர்வேத திணைக்கள உயர் அதிகாரிகள், வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு இதற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -