கந்தளாய் பகுதியில் பத்து கிலோ பன்றி இறைச்சியை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற இருவர் கைது


எப்.முபாரக்-
திருகோணமலை கந்தளாய் பகுதியில் பத்து கிலோ பன்றி இறைச்சியை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற இருவரை அக்போபுர பொலிஸார் இன்று(25) கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கந்தளாய், அக்போபுர பகுதியைச் சேர்ந்த 21,மற்றும் 23 வயதுடைய இருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வான்எல பகுதியிலிருந்து அக்போபுர பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் அனுமதிப்பத்திரமின்றி பத்து கிலோ பன்றி இறைச்சியை கொண்டு சென்ற போதே போக்குவரத்து பொலிஸாரினால் சோதனை மேற்கொண்ட போதே அனுமதிப்பத்திரமின்றி பன்றி இறைச்சியை கொண்டு சென்ற இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு நாளைய தினம்(26) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -