தமிழ் பேசும் கிழக்கு மாகாண அரச ஊழியர்களுக்கு கடந்த 5 ம் திகதி தொடக்கம் 10 ம் திகதி வரை மட்டக்களப்பு, தாழங்குடாவில் அமைந்துள்ள தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் கிழக்கு மாகாண நிலையத்தில் இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறி இடம்பெற்றது.
தொடர்ச்சியாக ஆறு நாட்கள் கொண்ட இச்செயலமர்வில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து ஏராளமான தமிழ், முஸ்லிம் அரச ஊழியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
குறித்த செயலமர்வின் இறுதிநாள் நிகழ்வு (10) கிழக்கு மாகாண நிலையத்தில் இடம்பெற்றது. இதில் பயிற்சிநெறியில் கலந்து கொண்ட ஊழியர்களின் கலை கலாசார நிகழ்வுகள் சிங்களமொழி மூலம் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் கிழக்கு மாகாண உதவிப்பணிப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட இந்நிலையத்தில் குறித்த செயலமர்வில் கலந்து கொண்ட ஊழியர்கள்தான் முதல் குழுவினர்கள் என்று அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.சூரியகுமார் தெரிவித்தார்.