கல்முனைக்கு கணக்காளர் வருகையில்தாமதம்! புதனன்று கடமையேற்கும் சாத்தியம்!


காரைதீவு நிருபர் சகா-
ல்முனை வடக்கு உப பிரதேசசெயலகத்திற்கு நியமிக்கப்பட்ட பூரண அதிகாரம் கொண்ட கணக்காளர் வருகையில் தாமதம்நிலவுகிறது.

(15) திங்கட்கிழமை செயலகத்திற்கு கணக்காளர் வருகைதரவில்லை. பிரதேச செயலாளர் எ.ஜே.அதிசயராஜா கடமையில் இல்லை.

உள்நாட்லுவல்கள் அமைச்சின் கடிதமும் திறைசேரி முகாமைத்துவதிணைக்களத்தின் அனுமதிக்கடிதமும் கிடைக்கப்பெற்றுள்ளது.
நேற்றுமுன்தினம்அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவி. கோடீஸ்வரனைச்சந்தித்து உண்ணாவிரதிகளான சிவஸ்ரீ. க.கு சச்சிதானந்தசிவக்குருக்கள் மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்ஆகியோர் நன்றி தெரிவித்தவேளை அவர் இக்கடிதங்களைக்காட்டியுள்ளார்.
முறைப்படி நியமனக்கடிதம்அமைச்சிலிருந்து அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு கிடைக்கப்பெற்றதும் கணக்காளர் குறித்த செயலத்திற்கு அனுப்பிவைக்கப்படுவாரெனத் தெரியவருகிறது.

பெரும்பாலும் (16)செவ்வாய்க்கிழமை பூரணை விடுமுறை தினமாகையால் 17) புதன்கிழமை புதிய கணக்காளர் பதவியேற்கலாமெனத்தெரியவருகிறது.
புதிய கணக்காளர் காரைதீவைச் சேர்ந்தவரென்று தெரியவருகிறது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -