ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்குமா ? பாரசீக வளைகுடாவில் ஏற்பட்டுள்ள போர்மேகம்.

முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது-
ரபு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடாத்த திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு தகவல் கிடைத்துள்து. அதனால் ஈரான்மீது இராணுவ நடவடிக்கை எடுப்பதற்காக மேலதிக விமானங்களுடன் தனது யு.எஸ்.எஸ். ஆப்ரகாம் லிங்கன் என்னும் விமானம் தாங்கி கப்பலை வளைகுடா நோக்கி அமெரிக்கா அனுப்பியுள்ளதாக அறிவித்தது.

சதாம் ஹுசைனிடம் பேரழிவு தரும் இரசாயன ஆயுதங்கள் இருப்பதாக உலகை நம்பவைத்து 2௦௦3 இல் ஈராக்குக்கு எதிரான யுத்தத்தில் இந்த கப்பல் முக்கிய பங்காற்றி இருந்தது.

அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும்வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.05 2019) ஐக்கிய அரபு அமீரகத்து துறைமுகத்தில் நின்ற நான்கு கப்பல்கள் தாக்குதலுக்குள்ளானது.

இந்த நான்கில் இரண்டு கப்பல்கள் அமெரிக்கா நோக்கி எண்ணையை ஏற்றிக்கொண்டு சென்ற சவூதிக்கு சொந்தமான கப்பலாகும். மற்றயதில் ஒன்று அமீரகத்துக்குரியது.

இந்த சம்பவம் நடந்து மறுநாள் சவூதி அரேபியாவில் அமைந்துள்ள அறங்கோ நிறுவனத்தின் என்னை விநியோக மையத்தின் இரண்டு இடங்களில் விமானத் தாக்குதலும் நடைபெற்றுள்ளது.

இவ்வளவு பாரிய சம்பவங்கள் நடந்திருந்தும், சவூதியும், அமீரகமும் இந்த தாக்குதலை நடாத்தியது யாரென்று தாங்கள் புலனாய்வு செய்வதாக கூறியுள்ளதே தவிர, யாரையும் விரல்நீட்டி குற்றம் சாட்டவில்லை.

கப்பல் தாக்கப்பட்ட கடல் பிரதேசமானது ஈரானுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடைப்பட்ட கடல் பகுதியாகும். இவ்வாறு தாக்குதல் நடாத்துவதற்கு ஈரான் அல்லது அதன் ஆதரவுபெற்ற இயக்கத்தை தவிர வேறு யாருக்கும் துணிச்சல் வராது.

பாரசீக வளைகுடா பிரதேசமான சவூதி அரேபியா, குவைத், கட்டார், வஹ்ரைன், ஈராக், ஈரான் போன்ற நாடுகளுக்கு செல்வதென்றால் இந்த குறுகலான கடல்பாதை வழியாகவே செல்ல வேண்டும். அவ்வாறுதான் அமெரிக்க யுத்தக் கப்பல்களும் செல்வது வழக்கமாகும்.

ஆனால் ஏற்கனவே இந்த பிராந்தியத்தினை நோக்கி புறப்பட்ட யு.எஸ்.எஸ். ஆப்ரகாம் லிங்கன் கப்பலானது பாரசீக வளைகுடாவை அடைவதற்கு இன்னும் இந்த குறுகலான பாதையை வந்தடையவில்லை. எப்பவோ வந்தடைய வேண்டிய இந்த கப்பல், சவூதியின் கப்பல்மீதான தாக்குதலினால், இப்பாதையை கடப்பதற்கு அமெரிக்கா அச்சமடைவதனை காட்டுகின்றது.

அமெரிக்கா ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளதுடன் அவ்வப்போது அச்சுறுத்தி வருகின்றது. ஆனால் அமெரிக்காவை போருக்கு அழைத்துள்ளதுடன், இஸ்ரேல்மீது போர் தொடுத்து அதனை அழிக்கப்போவதாகவும் ஈரான் கூறியுள்ளது.

2௦௦3 இல் ஈராக் இருந்ததுபோன்ற பலயீனமான நிலையில் தற்போது ஈரான் இல்லை. மாறாக நவீன மயப்படுத்தப்பட்ட முப்படைகளையும் ஈரான் கொண்டுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் மிகவும் பலம்வாய்ந்த நாடாக ஈரான் உள்ளது.

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்காக ஒரு இலட்சத்து இருபது ஆயிரம் படைகளை வளைகுடாவுக்கு அனுப்ப ஆரம்பத்தில் திட்டமிட்டது அமெரிக்கா. ஆனால் பின்பு இன்னும் அதனையும்விட அதிகமான படைகளை அனுப்ப தீர்மானித்துள்ளதாக அறியக் கிடைக்கின்றது.

தனக்கு சவாலாக இருக்கின்ற இஸ்லாமிய நாடுகளை அழித்து வருகின்ற அமெரிக்காவுக்கு துணையாக அதன் நற்பு நாடுகளான அரபு நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் கூட்டு சேர்ந்து தாக்குவது வழமையாகும்.

அதுபோல் ஈரானை ஆக்கிரமிக்க அமெரிக்கா எடுக்கும் முயற்சிக்கு இந்த நாடுகள் கூட்டு சேருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஏனெனில் போர்ப் பதட்டம் ஏற்பட்டதும் ஈராக்கில் நிலைகொண்டிருந்த சில நாட்டு இராணுவத்தினர்கள் ஈராக்கைவிட்டு வெளியேறியுள்ளார்கள். இவைகள் அமெரிக்க நற்பு நாடுகளாகும்.

அவ்வாறு அந்த நாடுகள் கூட்டு சேராதுவிட்டால் அமெரிக்கா மட்டும் தனியாக சென்று ஈரான்மீது தாக்குதல் நடாத்துவதற்கு துணிச்சல் வராது என்பது மட்டும் உண்மையாகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -