நுஜா அங்கத்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி வைப்பு

பைஷல் இஸ்மாயில் -
தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) அங்கத்தவர்களுக்கான அடையாள அட்டை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (12) அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் அதன் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு அதிதிகளாக கல்முனை மாநகர சபையின் செயலாளரும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் முன்னாள் உதவிச் செயலாளருமாகிய பிர்னாஸ் இஸ்மாயில், நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்ஸில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், ஸ்தாபகச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ.கபூர் ஆகியோர் கலந்து கொண்டு நுஜா அங்கத்தவர்களுக்கான அடையாள அட்டையை வழங்கி வைத்தனர்.

இதில் நுஜா ஒன்றியத்தின் செயலாளர் பைஷல் இஸ்மாயில், பொருளாளர் ஜூல்பிக்கா செரீப், பிரதித் தலைவர்களான எம்.எச்.எம்.கியாஸ், எஸ்.எல்.எம்.அபுபக்கர், தேசிய இணைப்பாளர் சலீம் றமீஸ், தேசிய அமைப்பாளர் எம்.எச்.முஸ்தாக் முஹம்மட் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -