நாட்டில் ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு கட்சிகளில் பிரதிதுவபடுத்துவதால் ஆட்சி நடத்துவதில் பல்வேறு முரண்பாடுகள் நிலவுகின்றது

அமைச்ச்ர் இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

க.கிஷாந்தன்-
ந்த நாட்டில் ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு கட்சிகளில் பிரதிதுவம் படுத்துவதால் ஆட்சி நடத்துவதில் பல்வேறு முரண்பாடுகள் நிலவுகின்றது.

இதேபோன்று முன்னால் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா குமாரதுங்க ஆட்சி நடாத்திய காலத்தில் ஜனாதிபதியாக திருமதி சந்திரிக்கா குமாரதுங்கவும் பிதமராக ரணில் விக்கிரமசிங்கவும் இருந்த வேளையில் இரண்டு வருடங்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடை பெற்றது.

இதே போன்று இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆட்சியமைக்க கூடாது. ஒரேக்கட்சியை சேர்ந்தவர்களே ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் இருக்க வேண்டும். எனவே எதிர் வரும் தேர்தல்களில் பொது மக்கள் ஒரேகட்சியை சேர்ந்த வர்களை ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் தெரிவு செய்ய வாக்களிக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட அபிவிருத்தி அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் 20 இலட்சம் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் மக்கள் பார்வை அரங்கம் அமைப்பதற்கான அடிக்ககல்லை அமைச்சர் 17.05.2019 அன்று நாட்டி வைத்தார்.

கல்லூரி அதிபர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் கல்லூரியின் பழைய மாணவரும் நுவரெலியா மாநகரசபை உறுப்பினருமான ஆர். கேதீஸ், நுவரெலியா வலய கல்வி அதிகாரி எம்.மோகன்ராஜ் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

இவ் அடிக்கல் நாட்டு வைபவத்தை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சசர் இராதாகிருஷ்ணன் கருத்து தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் ஒரேகட்சியை சேர்ந்த ஜனாதிபதியும், பிரதமரும் இல்லாததால் ஆட்சியில் ஒன்றுக்கொன்று கருத்து முரண்பாடுகள் அடிக்கடி ஏற்படுகின்றது.

இரண்டு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஆட்சி நடத்துவதால் இருவருக்கிடையில் வேறுப்பட்ட கருத்துக்களை கூறுகின்றனர். இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. ஒற்றுமையின்மை தோன்றுகின்றது. நாட்டின் அபிவிருத்தியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் இந்நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலைக்கும் இவர்கள் இருவரும் வெவ்வேறுபட்ட கருத்துக்களை கூறுகின்றனர். எனவே இந்த நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்திகளை அபிவிருத்தி செய்யவும் சமூகங்களுக் கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தவும் எதிர்வரும் தேர்தல்களில் ஒரே கட்சியை சேர்ந்தவர்களை தெரிவு செய்ய மக்கள் வாக்களிக்க வேண்டும். என கூறினார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -