தேவையானளவு குருதியை வழங்க நடவடிக்கை


வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக வைத்தியர்கள், தாதியர்கள் தேவையான வகையில் வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு, நீர்கொழும்பு, றாகம வைத்தியசாலைகளுக்குத் தேவையானளவு குருதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, மட்டக்களப்பு சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 67 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் நீர்கொழும்பு சம்பவத்தில் 62 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு சுமார் 110 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளாகவும் அவர் குறிப்பிட்டார்.
வடகொழும்பு வைத்திய சாலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 எனவும் 24 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -