சவளக்கடை அல்-ஹிதாயா மகா வித்தியலயத்தில் வரலாற்றில் முதன்முறையாக 9ஏ சித்தி


எம்.எம்.ஜபீர்-
நாவிதன்வெளி கோட்டக்கல்வி அலுவலகத்தின் கீழுள்ள சவளக்கடை வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் க.பொ.த.சா.த பரீட்சையில் வரலாற்றில் முதன்முறையாக 9ஏ சித்தி பெற்று சாதனை படைத்த மாணவன் அப்துல் ஜலீல் முஹம்மட் ஹம்தியை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை ஆராதனை மண்டபத்தில் இன்று (01) இடம்பெற்றது.
இந்நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.எல்.பதுர்த்தீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாணவனுக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து பாராட்டி கௌரவித்தார்.
இதில் சம்மாந்துறை வலயக்கல்வி கல்வி பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச்.ஜாபீர், நாவிதன்வெளி கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து, மாணவனின் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -