சாய்ந்தமருது இளைஞர் தொழிற் பயிற்சி நிலையத்தின் 8வது ஆண்டு நிறைவு விழா.


எஸ்.அஷ்ரப்கான்-
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது இளைஞர் தொழிற் பயிற்சி நிலையத்தின் 8வது ஆண்டு நிறைவு விழா இன்று 08.04.2019 பயிற்சி நிலையத்தின் போதனையாசிரியரும் பழய மாணவருமான எம்.ஆர்.எம். சதீம் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளரும் சாய்ந்தமருது இளைஞர் தொழிற் பயிற்சி நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரியுமான எஸ்.எம்.ஏ.லத்தீப் அவர்களும் விஷேட அதிதியாக அம்பாறை மாவட்ட இளைஞர் பாரளுமன்ற உறுப்பினரும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரியுமான இஸட். எம்.ஸாஜீத் அவர்களும் பயிற்சி நிலையத்தின் போதனையாசிரியர் எம், வி.நெளசாத், நிம்சாத், றிஸ்வியா,அஸ்மிர்,ஆசிக் மற்றும் பயிற்சி நிலையத்தின் அலுவலக உத்தியோகத்தர்கள் நிஸார்,ஜெஸ்மீர்,ஜப்பார்,றிஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் 8வது ஆண்டு நிறைவு விழா போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் பரிசில்களும் வழங்கப்பட்டது.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -